காவிரியாற்றில் லைப் ஜாக்கெட் இன்றி ஆபத்தான பரிசல் பயணம்
ஏரியூர்: ஏரியூர் அடுத்த நாகமரை காவிரியாற்றில், லைப் ஜாக்கெட் இன்றி மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.தர்மபுரி-சேலம் மாவட்டம் இடையே எல்லையாக மேட்டூர் அணை அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்ட பகுதியான நாகமரை, ஒட்டனுாரில் இருந்து தினமும் சேலம் மாவட்ட பகுதியான பண்-ணவாடி, கொளத்துார் பகுதிகளுக்கு, விசைப்படகுடன், பரி-சல்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதே பயணத்தை சாலையில் செல்லும்போது, 60 கி.மீ., சுற்றி வர வேண்டும். இதனால், இரண்டு மணி நேரம் விரயமும், பணமும் வீணாகிறது. இதனால் நாகமரை, ஏரியூர், ஒட்டனூர், நெருப்பூர், பென்னாகரம், கொளத்துார், பண்ணவாடி, மேட்டூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் தினமும் இரு புறமும் பரிசல் பயணத்தை மேற்-கொள்கின்றனர். மேட்டூர் அணை நிரம்பும் போது, அப்பகுதி கடல் போல் காட்சி அளிக்கிறது. அதில் பரிசல் இயக்குவது ஆபத்தான பயணமாகவே உள்ளது. தற்போது மேட்டூர் அணை, 105 அடிக்கு மேல் உள்ள நிலையில், மூன்று கி.மீ. துாரம் நீர்த்தேக்க பகுதியில் பயணம் செய்கின்றனர்.அப்போது அனைவரையும், லைப் ஜாக்கெட் இல்லாமலே அழைத்து செல்வதாகவும், அதிகாரிகள் யாரேனும் வந்தால் மட்-டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகவும், அரசு நிர்-ணயம் செய்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.