உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திருவிழாவில் நாடகம்பார்த்தவர் திடீர் சாவு

திருவிழாவில் நாடகம்பார்த்தவர் திடீர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி:திருவண்ணாமலை மாவட்டம், சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் தனிஷ் லால், 90. இவர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் நடந்த கெபி திருவிழாவிற்கு வந்தார். அங்கு இரவு நடந்த பாஸ்கா நாடகத்தை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ