உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயில் மோதி இன்ஜினியர் பலி

ரயில் மோதி இன்ஜினியர் பலி

தர்மபுரி: தர்மபுரி அடுத்துள்ள கடத்துாரை சேர்ந்த தமிழரசன், 28. இன்ஜினியரிங் படித்து விட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், நேற்று காலை மாயமானார். நேற்று மதியம், 12:00 மணிக்கு அவருடைய வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில் சடலமாக தமிழரசனை, ரயில்வே போலீசார் மீட்டனர். விசாரணையில், ரயில்வே தண்ட வாளத்தை கடந்த சென்றபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி