உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வேண்டும்

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க பேரவை கூட்டம் நேற்று, பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.ஆர்.சின்-னசாமி, மாநில பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் பேசினர்.இதில், தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலை-ஞர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகை கட்ட-ணத்தில் பஸ் பாஸ் என்பதை, முற்றிலும் இல-வசமாக பயணம் செய்யும் வகையில், பஸ் பாஸ் வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க, அரசு வழங்கும், உதவித்தொகையை, 10,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். அரசு விழாக்கள் மற்றும் திட்ட விளக்க பிரசார நிகழ்வு-களில், தெருக்கூத்து கலைஞர்களை ஈடுபடுத்தி வருவாய் அளிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி