உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுமி உயிரிழப்பு

கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கிய சிறுமி உயிரிழப்பு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, மதிகோன்பாளையம் கொட்டாய்மேட்டை சேர்ந்த அமிர்தம், 35. இவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த, 17 அன்று நெல் அறுவடை செய்து, அதை பிரிக்க கதிரடிக்கும் இயந்திரத்தை வரவழைத்து நெல் அடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த அமிர்தத்தின் மகள் மேகா, 11, என்ற சிறுமி கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி, படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, தர்மபுரி மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின், நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்தவர்கள், மேகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி