உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி :நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். நேற்று நடந்த ஆட்டு சந்தையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்க, விற்க வந்திருந்தனர். அவர்கள், 300க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள், 4,000 முதல், 20,000 ரூபாய் வரை என மொத்தம், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி