உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் அரசு பள்ளி ஹெச்.எம்., சஸ்பெண்ட்

மாணவர்கள் கால் அமுக்கிய விவகாரம் அரசு பள்ளி ஹெச்.எம்., சஸ்பெண்ட்

அரூர், அரூர் அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, மாணவர்கள் கால் அமுக்கிய வீடியோ வைரலான நிலையில், ஹெச்.எம்.,ஐ 'சஸ்பெண்ட்' செய்து, டி.இ.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டியிலுள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் தலைமையாசிரியை உட்பட, 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவ, மாணவியர் சிலர், வகுப்பறையிலுள்ள பெஞ்சில் படுத்திருக்கும் தலைமையாசிரியை கலைவாணியின் கை, கால்களை பிடித்து, அமுக்கி விடும் வீடியோ வைரலானது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை பள்ளியை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.பள்ளிக்கு வந்த அரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜய குமார், விசாரணை நடத்தி, தலைமையாசிரியை கலைவாணியை, வேறு பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று அவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி