உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

தர்மபுரி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பேசினார். முன்னதாக, நான் முதல்வன் -உயர்வுக்கு படி என்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கையேட்டை மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், கல்லுாரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை