மேலும் செய்திகள்
ரூ.10,000 லஞ்சம்: கருவூல அதிகாரி கைது
30-Apr-2025
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது
23-May-2025
Playoff Raceல் நீடிக்குமா லக்னோ?
04-May-2025
பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மதனேரிகொட்டாயை சேர்ந்தவர் சக்திகுமார், 36; இவர் மீதான கொலை மிரட்டல் வழக்கு, பாலக்கோடு ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது. இதில் கைதாகாமல் உள்ள இவர், சரணடைய உள்ள நிலையில் முன் ஜாமின் பெற முயன்றார். இதற்காக, பாலக்கோடு ஸ்டேஷனில், கம்ப்யூட்டர் பிரிவு ஏட்டாக பணிபுரியும் சுரேஷ், 46, என்பவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.சக்திகுமார், தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, பாலக்கோடு ஸ்டேஷனுக்கு சென்று, 10,000 ரூபாயை, ஏட்டு சுரேஷிடம் கொடுத்த போது போலீசார் கைது செய்தனர்.
30-Apr-2025
23-May-2025
04-May-2025