உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி /  அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

 அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

தர்மபுரி: மதுபோதையில் காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி டவுன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:3-0 மணிக்கு காந்தி நகரில், 'ஹூண்டாய் ஐ - 20' காரில் வந்த நபர், டவுன் எஸ்.வி., சாலையில் பைக்கில் சென்றவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றார். அப்போது, காரின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்தது. இருப்பினும், காரை நிறுத்தாமல், சாலையில் தீப்பொறி பறக்க, தர்மபுரி -- சேலம் நெடுஞ்சாலையில், 15 கி.மீ., துாரம் வரை அதிவேகமாக சென்றார். இதில், இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, பாளையம்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற பைக்குகள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினார். காரை ஓட்டி சென்ற நபரை, தர்மபுரி டவுன் போலீசார், பொதுமக்கள் விரட்டி சென்று, பாளையம் சுங்கச்சாவடி அருகே மடக்கி பிடித்தனர். பின், காரில் இருந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். போலீசார் விசாரணையில், தர்மபுரி, காந்தி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நந்தகுமார், 22, என்பதும், மது போதையில் விபத்து ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவரை நேற்று காலை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ