உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதிய ஆர்.ஓ., நிலையம் திறப்பு

புதிய ஆர்.ஓ., நிலையம் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி,:கடத்துார் ஒன்றியம் ரேகடஅள்ளியில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இதை முன்னாள், பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இமயவர்மன், பா.ம.க., நிர்வாகிகள் தமிழ்மணி, சரவணன், சூடாமணி புகழ்மணி உள்ளிட்ட ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !