உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 17 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது போலீசார் வழக்கு

17 வயது சிறுமிக்கு திருமணம்; 3 பேர் மீது போலீசார் வழக்கு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 17 வயதுடைய சிறுமிக்கும், செல்லம்பட்டியை சேர்ந்த சவுந்தர் என்பவருக்கும் கடந்த, 15ல் திருமணமானது. இது குறித்து அரூர் சமூக நல விரிவாக்க அலுவலர் மலர்கொடி, 54, அளித்த புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் சவுந்தர், அவரது அண்ணன் ஜாக்கின், மனைவி சாரதா ஆகிய, 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ