உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தனியார் பள்ளி பஸ் விபத்து

தனியார் பள்ளி பஸ் விபத்து

அரூர், தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கன்பட்டி அடுத்த பூ நகர் அருகே, நேற்று காலை, 8:20 மணிக்கு அரூர் நோக்கி தனியார் பள்ளி பஸ் வந்தது. அப்போது சாலையோரமிருந்த சிறிய பள்ளத்தில் பஸ் சாய்ந்தது. பஸ்சில் குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் குழந்தைகளை மீட்டனர், தொடர்ந்து, லேசான காயமடைந்த, 2 குழந்தைகளை தீர்த்தமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி