உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உழவரை தேடி திட்ட முகாம்

உழவரை தேடி திட்ட முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கே.தாதம்பட்டியில் உழவரை தேடி திட்ட முகாம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணன் தலைமை வகித்தார். வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி ஆகிய துறைகள் சார்பில் உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். உதவி தோட்டக்கலை அலுவலர் பெலிக்ஸ் ஜேசுதாஸ், உதவி பொறியாளர் சதாம் உசேன், ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !