உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டியில், மாரியம்மன், சென்றாய பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், மாரியம்மன் மற்றும் சென்றாய பெருமாள் கோவில் திருவிழா கடந்த, 27ல் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை, கணபதி ஹோமம், அம்மனுக்கு கொலு வைத்தல் நிகழ்ச்சிகளும், எல்லை பன்றி குத்துதல், காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் அம்மனுக்கு திருக்கல்யாணம், சக்தி அழைத்தல், பூமிதி விழா, மாவிளக்கு எடுத்தல் நடந்தது.நேற்று முன்தினம் அலகுகுத்துதல், உருளுதண்டம் வருதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நேற்று மாலை கோவில் தேரோட்டமும் நடந்தது. தேர் பவனி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வழியாக கடைவீதி, 4 ரோடு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி