அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த முத்தானுார் அரசு உயர் நிலைப் பள்ளியில், அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, திருப்பணிகள் திட்டம், முப்பால் பயிற்றுனர் மன்றத்தாரால், திருக்குறள் பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் முத்துராஜ் வரவேற்றார். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொறுப்பாளர் பாவலர் மலர்வண்ணண் பேசினார். எழுத்தாளர், ஓய்வுபெற்ற நுாலகர் சரவணன், தமிழறிஞர் நெடுமிடல் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தினர். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் முத்து நன்றி கூறினார்.