புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு சீல்
மாரண்டஹள்ளி: -தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தணிகாசலம் உள்-ளிட்ட குழுவினர் இணைந்து, மாரண்டஹள்ளி பஸ் ஸ்டாண்ட், வெளிச்சந்தை ரோடு, பஞ்சப்பள்ளி சாலை மற்றும் அதனை சுற்-றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடை-களில் சோதனை நடத்தினர்.அதில், பஞ்சப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பீடா கடையில், இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய-வந்தது. அந்த கடைக்கு சீல் வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அப-ராதம் விதித்தனர்.