உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

தர்மபுரி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில், கார்கில் போரில் உயிர் நீத்த, இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், போரில் பங்குபெற்ற வீரர்களுக்கு மரியாதை செலுத்தும், நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில், தி.முக., -- எம்.பி., மணி, பா.ம.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நகராட்சி சேர்மன் லட்சுமி, முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை