தாறுமாறாக நிறுத்தப்படும்வாகனங்களால் அவதி
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க., நகரில், இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன், சாலையில் இருபுறமும் நிறுத்துகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தில்லை நகர், பாட்சாபேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையில் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.