உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.27.88 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

ரூ.27.88 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

அரூர்::தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் மஞ்சள் ஏலம் நடந்தது. 75 விவசாயிகள், 340 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 14,369 ரூபாய்க்கும், குறைந்த பட்ச விலையாக, 12,649 ரூபாய்க்கும், விற்பனையானது. இதேபோல், கிழங்கு மஞ்சள், ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 13,629 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக, 10,709 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 340 மூட்டை மஞ்சள், 27.88 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ