உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அரூர், அரூர் அடுத்த பெரியப்பட்டி பஞ்.,ல், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், மின்மோட்டார் பழுதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். பழுதான மின்மோட்டாரை சரிசெய்யக் கோரி பஞ்., நிர்வாகம் மற்றும் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன், நேற்று காலை, 8:15 மணிக்கு பெரியப்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடம் வந்த கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆதாம்அலி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், 8:45 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை