உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மயான வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

மயான வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

அரூர்: அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை, அரூர் - கடத்துார் சாலையோரத்தில், அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலையுள்ளது. மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ