உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து, 7 மாதங்களுக்கு பின், நேற்று வினாடிக்கு, 2,000 கன அடியாக குறைந்துள்ளதால், ஐவர்பாணியில் பாறைகள் தென்பட ஆரம்பித்துள்ளன.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லா-ததால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து சரிந்-துள்ளது. இதனால், தமிழக காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த, 7 மாதத்திற்கு பின் நேற்று மாலை, ஒகே-னக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 2,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குறைந்தளவே தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் பாறைகள் தென்பட ஆரம்பித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி