உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் நீர்

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் பெருக்கெடுத்து ஓடும் நீர்

கே.ஈச்சம்பாடி தடுப்பணையில்பெருக்கெடுத்து ஓடும் நீர்கம்பைநல்லுார், அக். 23-தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் கடந்த வாரம் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, 2,000 கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டதால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, 4,042 கனஅடி நீர் திறக்கப்பட்டதால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர். அதே போல் டி.அம்மாபேட்டை தென்பெண்ணையாற்றில் சென்னியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்கிறது. இருமத்துார் முதல், டி.அம்மாபேட்டை வரையுள்ள தென்பெண்ணையாற்று கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை