வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பு கட்
ஓமலுார், ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், குடிநீர், சொத்து வரி, கடை வாடகை என, பல லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. அவற்றை வசூலிக்கும் பணி நடக்கிறது. ஆனால் கடந்த வாரம், 8வது வார்டில் ஒரு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், நேற்று, 13வது வார்டில் ஒரு வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், ''நிலுவை வரிகளை, டவுன் பஞ்சாயத்துக்கு செலுத்தி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.