உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக்கு வாகனம் மோதி பெண் பலி

சரக்கு வாகனம் மோதி பெண் பலி

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள குழிப்பட்டியை சேர்ந்தவர் ராஜாத்தி, 60. இவர் நேற்று முன்தினம், ஒகேனக்கல் அடுத்துள்ள ஆலம்பாடியில் உள்ள, தனது தங்கை ஈஸ்வரி வீட்-டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று, தனது பேத்தி காவி-யாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்வதற்கு, ஆட்டோ மூலம் ஒகேனக்கலுக்கு வந்துள்ளார்.அப்போது எதிரே வந்த சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து, ஆட்டோ மீது மோதியதில் ராஜாத்தி தலையில் பலத்த காயம் ஏற்-பட்டது. காவியா, 9, ஆட்டோ டிரைவர் பிரபு, 38, உள்ளிட்டமூவரையும் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு ராஜாத்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ஒகேனக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ