சாலை விபத்தில் வாலிபர் பலி
போச்சம்பள்ளி: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த, கோட்டமருதுாரை சேர்ந்தவர் சிலம்பரசன், 22. இவர், பெங்களூரு சந்தை காய்கறிக்கடையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 5:00 மணிக்கு தனக்கு சொந்தமான பஜாஜ் பல்சர் பைக்கில் வீட்டிற்கு சென்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே, கவுண்டனுாரில், எதிரே வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.