உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை

ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை

சின்னாளபட்டி:ஆத்தூர் ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம், குட்டியபட்டி, வண்ணான்புதூர், மாதாநகர் கிராமங்களை உள்ளடக்கியது பிள்ளையார்நத்தம் ஊராட்சி. சில நாட்களுக்கு முன், ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்படுவதாகவும், கிராமத்திற்கு 5 லட்ச ரூபாய் தர முன்வருபவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் புகார் எழுந்தது. நேற்று மாலை, கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தினார். ''ஜனநாயக முறைப்படி தேர்தலில் பங்கேற்க வேண்டும். ஏலமுறையில் தலைவரை தேர்வு செய்ய முயற்சிப்பது சட்டவிரோதம்,'' என, அவர் எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்