உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு மருத்துவமனையில்சுகாதாரம் கேள்விக்குறி

அரசு மருத்துவமனையில்சுகாதாரம் கேள்விக்குறி

கொடைக்கானல்:கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள் வீசப்படுவதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.இங்கு புற நோயாளிகளாக 200 க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். வளாகம் முழுவதும் கழிவுகள் இருப்பதால், அமரக்கூட இடமில்லை.மகப்பேறு பிரிவு, பிணஅறை, உள்நோயாளிகள் பிரிவிலும் இதே நிலை. கழிவு அறைகள் அருகில் சென்றாலே துர்நாற்றம். நீண்ட நாட்களாக அகற்றப்படாத புதர்கள், வீசப்படும் கழிவுகள் மலை போல காட்சியளிக்கின்றன. இங்கு துப்புரவு பணியாளர்கள் இருந்தும், அலங்கோலாமாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம், தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்