பழநியில் பக்தர்கள் கூட்டம்
பழநி : பழநி முருகன் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வருகை புரிந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.