பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வந்தனர். ரோப்கார், வின்ச் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெயிலில் குடை பிடித்து சில மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்கள் சிலர் கட்டுப்பாட்டை மீறி அலைபேசிகளை மலைக் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.