உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் விழாவில் பூ பல்லக்கு ஊர்வலம்

கோயில் விழாவில் பூ பல்லக்கு ஊர்வலம்

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவில் நடந்த பூ பல்லக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் காலை ,மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. மே 20-ல் கைலாசநாதர் - ,செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் , மே 21ல் திருத்தேரோட்டம் நடந்தது.இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பால்லக்கு ஊர்வலம் நடந்தது.இதில் கைலாசநாதர்-,செண்பகவல்லி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ