உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிகளுக்கு தொல்லை: டிரைவருக்கு பிடிவாரன்ட்; வாலிபருக்கு சிறை

சிறுமிகளுக்கு தொல்லை: டிரைவருக்கு பிடிவாரன்ட்; வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: பழநி ஆயக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேறொரு வழக்கில் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பழநி ஆயக்குடியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் நாராயணன்58. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பழநி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண், குற்றவாளி நாராயணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இருந்தும் நாராயணன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. * இதேபோல் பழநி ஆவனி மூலவீதியை சேர்ந்த தனியார் ஊழியர் சஞ்சய்20. 2021ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். பழநி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண், குற்றவாளி சஞ்சய்க்கு 25 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி