உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாநகராட்சிக்கு வந்த புதிய குப்பை வண்டிகள்

மாநகராட்சிக்கு வந்த புதிய குப்பை வண்டிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மக்கும்,மக்காத குப்பையை தரம்பிரித்து வாங்கி நுண் உர செயலாக்க மையத்தில் உரமாக்கப்படுகிறது. குப்பையை சேகரிக்க மாநகராட்சியில் 117 வாகனங்கள் உள்ள நிலையில் பல பகுதிகளில் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் எடுக்க வருவதில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. இதைத்தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ரூ.1.67 கோடி மதிப்பில் புதிதாக 23 குப்பை வண்டிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வண்டிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை