இ- சேவா கேந்திரா திறப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இரண்டு இ-சேவா கேந்திராக்களை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார். இதன் மூலம் பொது மக்கள்,வழக்கறிஞர்கள் வழக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். வழக்குகளின் நிலையை தெரிந்து கொள்ளலாம். கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி.,பிரதீப், நீதிபதிகள் மெகபூப் அலிகான், முரளிதரன்,சரண், வேல்முருகன், கனகராஜ், மீனாட்சி, தீபா,சோமசுந்தரம்,அருண்குமார், ரங்கராஜ், தீபா, சவுமியா மேத்யூ, ஆனந்தி பங்கேற்றனர்.