உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் ஓட்டுப்பதிவில் சேவை பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தேர்தல் ஓட்டுப்பதிவில் சேவை பள்ளி மாணவர்களுக்கு பரிசு

வடமதுரை: ஏப்.19ல் நடந்த கரூர் லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டுப்பதிவின் போது வடமதுரை புத்துார் அரண்மனைப்பட்டி பூத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தன்னார்வலராக பணிபுரிந்த பள்ளி மாணவர்கள் கிருஷ்ணன், தமிழ்செல்வன், ஜீவா பிரதீப் ஆகியோர் சிறந்த முறையில் சேவை புரிந்தனர். இதற்காக இம்மாணவர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்த கரூர் கலெக்டர் தங்கவேல் ,பரிசு பெட்டகம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். உதவி தேர்தல் அலுவலர் ஜெயசித்ரா கலா, வேடசந்துார் தாசில்தார் சரவணக்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்