உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லாப்பெட்டியில் கைவைத்த போலீசார் வீடியோ பரவுகிறது

கல்லாப்பெட்டியில் கைவைத்த போலீசார் வீடியோ பரவுகிறது

சாணார்பட்டி,:திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே செங்குறிச்சி அரசு டாஸ்மாக் பாரில் சோதனை செய்ய வந்த மதுவிலக்கு போலீசார், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து சென்ற வீடியோ காட்சி பரவி வருகிறது.செங்குறிச்சியில் அரசு அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மதுவிலக்கு எஸ்.ஐ., முத்துக்குமார் ஜூலை 27ல் போலீசாருடன் சென்றுள்ளார். அங்கிருந்த முதியவர் பையில் வைத்திருந்த, 400 ரூபாய், பாரில் விற்பனை செய்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 17,000 ரூபாயை முத்துக்குமார், அவருடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் என எடுத்து சென்று உள்ளனர்.இது, பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ நேற்று முதல் பரவி வருகிறது. இந்நிலையில் அன்றைய தினம் செங்குறிச்சி பாரில், 1,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி