உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விநாயகர் கோயில்களில் வளர்பிறை சதுர்த்தி

விநாயகர் கோயில்களில் வளர்பிறை சதுர்த்தி

திண்டுக்கல்: சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோயிலில் காலை 7 :00மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பலர் சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயகரை தரிசித்தனர்.திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிேஷகம் அலங்காரங்கள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை