திறனாய்வு தேர்வு 105 மாணவர்கள் தேர்ச்சி
திண்டுக்கல்: ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பயிலும் வரை படிப்பு உதவித் தொகையாக ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஊரகத் திறனாய்வுத் தேர்வு 2024 டிச 14ல் நடைபெற்றது. மாவட்டத்தை சேர்ந்த 2938 மாணவர்கள் எழுதியதில் 51 மாணவர்கள், 54 மாணவிகள் என 105 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.