நாய்கள் கடித்து 9 ஆடுகள் பலி
வேடசந்துார் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே கூவக்காபட்டியை சேர்ந்தவர் விவசாயி லோகநாதன் 39. இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை அடைத்து வைப்பதற்காக ஆட்டுப்பட்டி அமைத்து 21 ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு இங்கு புகுந்த தெரு நாய்கள் கூட்டம் கடித்து குதறியதில்9 ஆடுகள் பலியாயின.