உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்

திண்டுக்கல்; கொடைக்கானலில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கிஷோர் 22. இவர் 2021ல் கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். நாளடைவில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். கொடைக்கானல் போலீசார் போக்சோவில் கிஷோரை கைது செய்தனர். இதன் வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கிஷோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை