இடமிருந்தும் வாடகையில் இயங்கும் தபால் நிலையம்
வடமதுரை: வடமதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை தபால் நிலையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வாடகை இடத்தில் இயங்கியது. தற்போது அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் வாடகை கட்டடத்தில் உள்ளது. இப்பகுதிக்கு செல்ல குண்டும், குழியுமான தனியார் இடம் வழியே ,சுற்றுப்பாதையாக கூட்டுறவு சங்க வளாக பாதையை பயன்படுத்தி செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதி மக்கள் தபால் நிலைய சேவையை பயன்படுத்த அவசியமற்ற அலைச்சல், சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வடமதுரை பழைய போலீஸ் குடியிருப்பு அருகில் தபால் நிலையத்திற்கென இடம் வாங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டடம் அமைக்க நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளது. தபால் நிலையத்திற்கென இடத்தில் கட்டட வசதி உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.