உள்ளூர் செய்திகள்

 வருடாபிஷேகம்

நத்தம்: நத்தம் அருகே கொண்டையம்பட்டி மந்தை பகவதி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, தீபாராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தன. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். அன்னதானம் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை