அதிகாரிகளுடன் வாக்குவாதம்
பழநி: பழநி இட்டேரி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் காய்கனி கமிஷன் மண்டி மார்க்கெட்டில் நகர் நல அலுவலர் மனோஜ் குமார், நகரமைப்பு அலுவலர் புவனேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். வியாபாரிகள் மார்கெட் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து புகை மூட்டமாக உள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.