குப்பையை கொட்டி எரிப்பதால் உருவாகும் புகையால் மூச்சு திணறல்
வாய்க்கால் அருகே வெங்காய கழிவு : திண்டுக்கல் - கரூர் ரோட்டில் கல்வார்பட்டி அடுத்துள்ள ரங்கமலை வாய்க்கால் அருகே வெங்காய கழிவு மூடைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .ரோட்டில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.-எல்.பூவரசன், வேடசந்துார்.............--------கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு : திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஓட்டல் கழிவுகள் வெளியேறுவதால் கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. கழிவுநீர் வெளியே வராமல் தடுக்க வேண்டும்.-பூ.பாலசுப்பிரமணியன், திண்டுக்கல்..................-------சேதமடைந்த மின்கம்பம் : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் அருகே ரோஜா நகரில் மின்கம்பம் சேதமடைந்து பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது. மரத்தில் செடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.---சவுந்தரராஜன், ரோஜா நகர்...............--------சேதமடைந்த ரோடு : ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் இருந்து அரசப்பபிள்ளைபடடி செல்லும் ரோட்டில் பள்ளம் உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. இதனை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். --பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம்...............--------குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் : நத்தம் அருகே வேலம்பட்டி செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார பிரச்னை ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் பாதிக்கும் நிலை உள்ளது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வராஜ், நத்தம்................-----மரத்தால் விபத்து அபாயம் : திண்டுக்கல் - திருச்சி ரோடு சீலப்பாடி சந்திப்பு அருகே பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குமார், திண்டுக்கல்.................---------புகையால் பாதிப்பு : திண்டுக்கல் லாரி பேட்டையில் குப்பையை கொட்டி தீவைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்படுகிறது. அருகில் குழந்தைகள் மையம் உள்ளதால் குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும்.-மனோஜ்குமார், திண்டுக்கல்.