உதவி இயக்குநர் ஆய்வு
நத்தம்: வேலம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தினமும் மோர் வழங்க அறிவுறுத்தினார். வேலம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கினார். சேர்வீடு,துவராபதி பகுதிகளில் நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,மகுடபதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யகுமார், ஊராட்சி செயலர் மணி உடனிருந்தனர்.