உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் கோயில் எறிகாசு சேகரிக்க ரூ.6 லட்சம் ஏலம்

அய்யலுார் கோயில் எறிகாசு சேகரிக்க ரூ.6 லட்சம் ஏலம்

வடமதுரை: அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு சேகரிக்கும் ஏலம் ரூ.6 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்- திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலுார் அருகே வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே வாகனங்களின் பயணிப்போர், சுவாமிக்கு காணிக்கையாக எறியும் காசுகள், சிதறுதேங்காய் சேகரிக்கவும், வாகனங்கள் பாதுகாப்பு வரி வசூல் செய்து கொள்ளவும் ஹிந்துசமய அறநிலைய துறை சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது.நடப்பு ஆண்டில் 2025 ஜூன் வரையிலான 6 மாதத்திற்கான ஏலம் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமையில் நடந்தது. ஆய்வாளர் செல்வராணி, செயல் அலுவலர் கனகலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் எறிகாசு சேகரிப்பதற்கான ஏலத்தை ரூ.6 லட்சத்து 500க்கு எடுக்கப்பட்டது. வாகன பாதுகாப்பு வரி வசூல், சிதறு தேங்காய் சேகரிப்பு ஏலங்களை யாரும் எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை