உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

செம்பட்டி: எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் காமராஜர் விருது வழங்கும் விழா நடந்தது. பொறுப்பு தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் நடந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் லியோன் வினோத்குமார் விருது வழங்கி பாராட்டினார். மாவட்ட தலைவர் கண்ணன் பேசினார். 'சி' அறக்கட்டளை நிர்வாகி அழகர்சாமி, ஏகம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை