பழநி கோயிலுக்கு பேட்டரி கார், பஸ்
பழநி: பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு பேட்டரி பஸ், ஒரு பேட்டரி கார் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பஸ் ஸ்டாண்ட், ஆகியவற்றிற்கு பயணிக்க கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக 17 பேட்டரி கார், 12 பேட்டரி பஸ், இரண்டு டீசல் பஸ் என 31 வாகனங்களை இயக்கி வருகிறது.இந்நிலையில், ஜி ஸ்கொயர் ரியல்டர் பிரைவேட் லிமிடெட் தனியார் நிறுவனத்தின் சார்பில் 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ், பி.வி.பி., குரூப் நிறுவனத்தின் சார்பில் 11 பேர் அமரக்கூடிய மற்றொரு எலக்ட்ரிக் கார் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 33 வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.