பனிமூட்டத்தில் படகு சவாரி
கொடைக்கானல்:கொடைக்கானலில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில தினங்களாக சாரல் மழை நீடித்து வருகிறது. அவ்வப்போது தரையிறங்கும் பனிமூட்டம் என ரம்யமான சூழலுடன் வெயிலும் உள்ளது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவுகிறது. இத்தகைய சூழலை வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனுபவிக்கின்றனர்.ஏரியை முத்தமிட்டு செல்லும் பனி மூட்டத்திற்கு இடையே படகு சவாரி செய்தனர்.